மணமுறிவுக்குப் பின், ஊதியம் ஏதும் இல்லாமல் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும், சுய ஊதியம் இல்லாத ஆண் அல்லது பெண்ணுக்கு மற்றவர் வாழ்நாள் முழுதுமோ அல்லது அவர் இன்னொரு வேலையை தேடிக்கொள்வது வரையோ தரும் உதவித்தொகைதான் alimony எனப்படும் உதவித் தொகை. எவ்வளவு உதவித்தொகை என்பதும், யார் யாருக்கு தர வேண்டும் என்பதையும் நீதிமன்றம் இருதரப்பு வழக்கறிஞர்களோடு பேசி தீர்மானிக்கும்.
உதவித் தொகையின் அளவு திருமண வாழ்க்கையின் காலம், குழந்தைகள், ஒருவருக்கு வேலை கிடைக்க/பார்க்க கூடிய சாத்தியம், இன்னொருவரின் வருமான அளவு, திருமண வாழ்க்கையில் அனுபவித்த வசதிகள் ஆகியவை பொறுத்து அமையும்.
உதாரணமாக, கணவன் மனைவி இருவருமே நன்கு படித்து, நல்ல வேலையில் இருந்தவர்கள். திருமணத்திற்கு பிறகு வீட்டை நிர்வகிக்க மனைவி வேலையை விட்டுவிட்டாலும் கூட, அவர் கடைசியில் வாங்கிய ஊதியம், அந்த துறையில் இன்னொரு வேலை கிடைக்க கிடைக்கும் காலம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
முன்னாள் ஆளுனர் மெக்ரீவியின் மனைவி, விவாகரத்திற்கு பிறகு மாதம் $56,000 ஈடாக கேட்டு இன்னமும் வழக்கு குட்ம்ப நீதிமனறத்தில் இருக்கிறது. இந்த தொகை கிடைக்குமா, அவருடைய குழந்தையின் செலவு, அவர்கள் முன்னால் வசித்த வாழ்க்கையின் வசதி, மெக்ரீவியின் சம்பாதிக்கும் திறன் இவையாவும் கணக்கில் கொள்ளப்படும். கூடுமானவரை இருவரையும் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டபோதும், முடிவுக்கு வராததால் இது இப்போது விசாரணைக்கு செல்கிறது.
பொருளீட்டும் சாத்தியக்கூறு:
ஒருவரின் ஊதியம் கணக்கில் கொள்ளப்படும் என்று சொன்னேன் அல்லவா, அதை ஏமாற்ற சிலர் முயற்சி செய்யலாம். உதாரணமாக, வந்தனா ஒரு பொறியியல் வல்லுனர், வருட வருமானம் $100,000 என்று வைத்துக்கொள்வோம். அவர் கணவரை இந்தியாவில் இருந்து மேலே படிக்க இங்கே வரவழைத்திருக்கிறார். இருவருக்கும் ஏற்பட்ட பிணக்கில் விவாகரத்துக்கு செல்கிறார்கள். திடீரென வந்தனா தன் வேலைஅயி விட்டுவிட்டு, வீட்டிலேயே வேலை செய்யப் போவதாக சொல்லி, வருட வருமானம் $20,000 காட்டுகிறார். என்றாலும் நீதிமன்றம் இதை கண்டுகொள்வதில்லை. இந்த வழக்கில் alimony கணவனுக்கு வருட வருமானம் $100000 கணக்கில் கொண்டே வழங்க உத்தரவிட்டது.
அதேபோல இருவரின் திருமண வாழ்க்கையின் காலம், குழந்தைகள் ஆகியவையும் கணாக்கில் கொள்ளப்படும். ஒரு பரபரப்பான வழக்கில், கணாவன் மனைவி இருவரும் மேலாண்மை படித்தவர்கள். இருவரும் சரிசமமான ஊதியத்துடன் வாழ்க்கையை தொடங்கினர். இரண்டு குழந்தைகள் பிறட்ந்ஹபின் மனைவி தன் வேலையை விட்டு விட்டு குழந்தகளை பார்த்து கொள்ல வீட்டை நிர்வாகிக்க, கணவனுக்கு சில உதவிகள் (பணி தொடர்பாக) செய்து வந்தார். பிள்லைகள் வழக்கறிஞராகவும் மருத்துவராகவும் பணி புரியத் தொடங்கும் வரை பள்ளி கூட்டங்கள், கல்லூரி விழாக்கள் என்று எல்லாவற்றிற்கும் மனைவி சென்று வந்ததோடு மட்டும் அல்லாமல் ஒரு வீட்டு பிரச்சினை எதையும் கணவன் தொல்லை செய்யாமலும் பார்த்து நிர்வகித்தார். ஒரு 30 வருட திருமணத்திற்கு பிறகு கணவன் அவரை விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்த போது, தான் சம்பாதித்த சொத்து அனைத்தும் தன்னுடையது என்றும் அதில் எந்த உரிமையும் மனைவிக்கு இல்லை என்றும் சொல்லி வாதாடினார். பிள்ளையே அம்மாவுக்கு ஆதரவாக வழக்காடினார். தன் அம்மா உதவி இல்லாமல் தன் தந்தை பொருளீட்டுவது முடியாது என்றும், குடும்ப பிரச்சினைகளை அம்மா பார்த்துக்கொண்டதால் மட்டுமே தந்தையால் வெற்றிகரமாக முடிந்தது எனவும், மேலும் அம்மாவாலும் சரிக்கு சமமாக அல்லது ச்ற்றேனும் குறைவாகவோ பொருளிட்டியிருக்க முடியும் எனவும் வாதாடி கடைசியில் கணவனின் 20 மில்லியன் சொத்தில் மனைவிக்கு சரிபாதி என தீர்ப்பானது.
பிடித்தம் போக வருமானம் (net income): ஒருவரின் நிகர வருமானமே உதவித் தொகை வழங்க கருத்தில் கொள்ளப்படும். இதை தெரிந்த இராம், விவாகரத்து முடியும் தருவாயில் அதிக பிடித்தம் செய்ய தன் அலுவகத்தை வினவி இருக்கிறார். வருமான வரி தவிர, சில முதலீட்டில், சில மருந்து பொருட்கள் வாங்க, கல்வி நிதி போன்றவற்றிற்கு அலுவலகத்தின் மூலமே சம்பாத்தியத்தில் பிடித்தம் செய்துகொள்ள முடியும். ஆனால் அவர் செய்த தவறு, நிகர வருமானம் கணக்கிடப்படும் போது நீதிமன்றம் வரி, மருத்துவ காப்பீடு போன்றவற்றை மட்டும் தான் கணக்கில் கொள்ளும் என்பது. எனவே அவசரமாக செய்ய சொன்ன பிடித்தங்கள் பலனில்லாமல் போனது.
நீதிமனறாத்தில் ஒருவர்ன் மாத வருமானம், செலவு ஆகியவற்றை கடந்த ஒரு வருடத்திற்கு தர சொல்லுவார்கள். சில இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், இது போன்ற உதவி தொகை தர மறுக்கும் தங்கள் பணியாளருக்கு உதவ விரும்பி ஊதியம் இந்தியாவில்தான் வழங்குகிறோன் என்ரு சான்றிதழ்கள் தருகிறார்கள். சமீபத்தில் இது போல நியுஜெர்சியில் சொன்ன ஒரு நிறுவனத்திற்கு அரசாங்கத் தரப்பில் எல்லா ஊழியர்கள் சம்பளாப்பட்டியலுடன், நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கேட்டும் ஒரு ஆணை சென்ற உடனே, சான்றிதழை திரும்ப பெற்றதோடு அவர்கள் மேல் வரு இருந்த வழக்குகள், கடவுசீட்டு பிரச்சினைகள் ன பலவற்றையும் எண்ணி ஊழியரை பணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதனால் வழக்கு முடியும் வரை ஊழியர் நியுஜெர்சியில் இருக்க இயலாத நிலை வந்து, கடவுசீட்டு பிரச்சினகல் அதிகரித்து நிலமை மேலும் சிக்கலானது.
இன்னும் குடும்ப க்டன்கள், வீட்டு வாட்கை, அல்லது சொந்தமானதாக இருந்தால் அதன் மேலுள்ள கடன், எத்தனை காலம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.