»
S
I
D
E
B
A
R
«
Musafir
November 16th, 2007 by பத்மா அர்விந்த்

பழகிய தனிப்பாதையை விட்டு நமக்கான பாதையில் பயணிக்க ஆரம்பித்தபோது கல்லும் முள்ளுமாக சீரமைக்காமல் புதிய பாதை கடினமாகத்தான் இருந்தது. பயணம் முடிந்து போகும் என்று தோன்றியபோதுதான் மெல்ல மறைந்திருந்த அழகான பாதைகள் தெரிய வந்தது. சாலைகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கடந்து வந்த பாதையை கொண்டே பயணிப்பதை புரிந்துகொள்ள முடிகிறமாதிரி, பயணம் செய்யும் களைப்பே இல்லாமல் இயல்பாக இருக்கிறது. நீ இருப்பதன் பரிமானம், இல்லாதபோதுதான் விஸ்வரூபம் எடுத்து தெரிவிக்கிறது. இப்போதெல்லாம் நீ அலுவக தவத்தில் ஆழ்ந்து போய் இருக்கிறாய். கலைந்த பிறகு, நீ தவறவிட்ட காட்சிகள், சில அனுபவங்கள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கட்டும். சகபயணிக்கு என் வாழ்த்துக்களும் சுகமான பயணத்துக்கான நன்றியும்.


4 Responses  
  • Tulsi Gopal writes:
    November 16th, 2007 at 11:18 pm

    முசாஃபிர் அவுர் ஹஸீனாவுக்கு வாழ்த்து(க்)கள்.

    நல்லா இருங்க பத்மா.

  • Thiru writes:
    November 18th, 2007 at 3:30 am

    கவிமொழியழகு! ரசிக்க வைக்கும் பதிவு பத்மா! நலமா?

  • பத்மா அர்விந்த் writes:
    November 18th, 2007 at 7:29 am

    நன்றி துளசி, திரு.

  • Murali writes:
    November 21st, 2007 at 5:03 pm

    Hello Padma

    Thanks for the nice post.

    Happy thanksgiving holidays.

    Murali
    KS, USA


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions