»
S
I
D
E
B
A
R
«
மணமுறிவும் உதவித் தொகையும் -6
December 4th, 2007 by பத்மா அர்விந்த்

உதவித்தொகை ஊதியம், வேலை பார்க்கவும், ஊதியம் பெறவும் ஆன தகுதி, திருமண காலம், குழந்தைகள், மற்றும் திருமண வாழ்க்கையின் போது இருந்த வாழ்க்கத்தரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும் என்று பார்த்தோம். ஆனால் திருமணத்தின் போது வீடு மற்றும் அட்டைகளில் கடன் இருந்தால் அது எப்படி பிரித்துக்கொள்ளப்படும் என்பதை இப்போது கவனிப்போம்.

கடன்:
வீட்டின் பேரிலோ, வாகனங்களின் பேரிலோ கடன் இருந்தால் அந்த கடன் தீர்ந்தால் யாருக்கு அதன் பலன் கிடைக்குமோ அவர் பெருவாரியான கடனையும் மற்றையவர் எத்தனை காலம் அதனை அனுபவித்தார் என்பதை பொறுத்து குறைவாகவோ கட்ட வேண்டும். வீடு வாங்கும் போது இருவரும் பணியில் இருந்ததால், மனிவியின் கடன் தரம் அதிகமாக இருந்ததால், கடன் வட்டி குறைவாக கிடைக்கும் என்பதால் மனைவியின் பேரில் வீட்டை வாங்கி விட்டு, இப்போது தன் பொருட்களை எடுத்துக் கொண்டு கணவன் வெளியேரிய போதும், அவர் கடனின் ஒரு பாதியை கட்ட வேண்டுமென்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு காரணமாக அவர்கள் திருமண வாழ்க்கை முழுதும் (7 வருடங்கள்) மனைவியே வீட்டின் கடனை கட்டி இருந்திருக்கிறார். கணவன் மற்ற செலவுகளை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இருந்தும், வழக்கு அதை பற்றியதல்ல என்பதாலும் அவர்களிடையே எந்தவிதமான படிவங்களும், அவர்களுக்கிடையே இருந்த ஒப்பந்தம் பற்றி தெரிவிக்காததாலும், இப்போது மனைவி பணம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாலும், தீர்ப்பளிக்க வேண்டியதாகியது.

வரி: alimony ஆக வழங்கப்படும் பணத்தை ஒருவர் தன் வரிகட்டவேண்டிய ஊதியத்தில் இருந்து குறைத்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைகளின் நலத்திற்காக, கல்விக்காக தரும் பணம் வரிக்குள்ளாலானது. இதனால் சில சமயம் சில கணவன் மனைவியர் alimonyஐ அதிகரித்தும், குழந்தைகள் ஆதரவுத் தொகையை குறைத்தும் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். இதில் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று: குழந்தைகள் ஆதரவு நிதி 18 வயதுவரை தந்தால் போதும், ஆனால் alimony காலம் இருவரும் ஒப்புக்கொண்ட காலம். ஆகவே சில வழக்குகளில் இது காலவரையற்று இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு வழக்கில் கணவன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைத்தால் போதும் என்று எண்ணி, மனைவி மறூபடியும் திருமணம் செய்து கொள்ளும் வரை ஆதரவுத்தொகை தருவதாகவும், வருடம் 3% அதிகரிப்பதாகவும் ஒப்புக்கொண்டார். அவர் விவாகரத்து கோரியபோது, மனைவி இன்னொருவரை காதலிப்பதாக மனமார எண்ணினார். மேலும் விவாகரத்து கோரியபோது நல்ல பணியில் இருந்து நிறைய ஊதியம் பெற்றும் வந்தார். மனைவி அதிக பணம் கேட்காமல், சரியான தொகை கேட்டதால், அதிகப்படி 3% அப்படியும் இரண்டு வருடம் தந்தால்ல் போதும் எனூற் நம்பி கையொப்பம் போட்டார். ஆனால், மனைவியோ திருமணமே செய்து கொள்லவில்லை. ஒரு 20 வருடம் கழித்து, கணவன் உடல் நலக்குறைவால் முழுநேரம் பணி செய்ய முடியாமல் போக ஊதியம் குறைந்த போதும் அதில் பெரும் அளவு முன்னாள் மனைவிக்கு போனது.கணாவனின் இரண்டாம் மனவி, அந்த திருமணம் மூலம் பெற்றுக்கோண்ட குழந்தைகள் என்று பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் பல வழக்கறிஞர்கள் ஆலோசனை பெற்றபோதும் ஓய்வும் பெற முடியாமல் திண்டாடுவது பற்றி பலருக்கும் கடிதம் எழுதி ஆலோசனை கேட்டிருந்தார். முடிவில் முன்னாள் மனைவியிடம் பேசி சரி செய்து கொள்வதே சரி என்று முயன்று கொண்டிருக்கிறார்.
எனவே ஒப்பந்தம் எழுதும் போதும், பேசும் போதும் நல்ல வழக்கறிஞர்கள் ஆலோசனை கேட்பது மிக முக்கியம்.

மனைவியையோ அல்லது கணவனையோ படிக்க வைப்பது: சில சமயம் கணவனோ அல்லது மனைவியோ இன்னொருவரை கல்லூரி அல்லது ஏதேனும் தொழில் நுட்பம கற்று தேற, பொருளாதார ரீதியில், தார்மீக ரீதியில் ஆதரவு அளித்திருப்பார்கள். இது அவர்களின் பொருள் ஈட்டும் திறனை அதிகரிக்க உதவி இருக்கும். சில மாநிலங்களில் இவை கவனத்தில் கொள்ளப்படுகிறது. சில மாநிலங்களில் இன்னமும் இது கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றாலும், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து ஆதரவு தொகையை குறைக்க முடியும்.

ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்றவை, அதன் பயன் பெறுநர் ஆகியவற்றை மாற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும். சிலர் விவாகரத்து பெற்றபின்னும், வேறு திருமணம் செய்து கொண்டபின்னும் மாற்ற மறாந்து போய்விடுவது உண்டு. இதனால், திடீரென இறந்து போக, அவரது ஆயுள் காப்பீடு அலுவலகத்தில் இருந்து முன்னாள் மனைவிக்கு வழங்கப்பட்டது. அவரின் இரண்டாம் மனைவி வழக்கு தொடர்ந்த போதும், இறந்து போன கணவன் ஏதாவது காரணத்திற்காக மாற்றாமல் இருந்திருக்கலாம் என்று சொல்லி, சட்டப்படி இதை மாற்ற இயலாது என்று சொல்லி விட்டார்கள். அதே போல வேலை பார்க்கும் நிறுவன படிவங்களில் பெயர் மாற்றம் செய்தால் தவிர, எல்லா பலன்களும் முதல் மனைவிக்கே (அவர் பெயர் இருந்தால்) கிடைக்கும்.

alimony கொடுக்க வேண்டுமமென்று சொல்லியும், அதை மாதா மாதம் சரியாக தராதவர்கள் நிறைய. இதில் அதிகம் துன்பப்படுவது வறூமையில் இருக்கும் பெண்களே. இது நீதிமனறத்திற்கு வருமானால், உடனடியாக இதுவரை தர வேண்டிய தொகையும் அதற்கான வட்டியும் சேர்த்து உடனே தர வேண்டும். இல்லை என்றால் சிறை வாசம், ஊதியத்தில் இருந்தே பிடித்தம் என்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

மாதாந்திர உதவித் தொகை எத்தனை பேர் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் குறிக்கும் அட்டவணை கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. Alimony2002 பிறகு உதவி தொகை பெறும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதற்கான புள்ளியியல் விவரங்கள் அதிகம் இல்லை என்றாலும் இந்த சுட்டி மேலும் பல விவரங்களைத் தரும்.

விவாகரத்திற்கு பிறகு மறுமணம் நடந்தபின்னும் உதவித்தொகை தர வேண்டுமா, நிறுத்தலாமா என்பது போன்றவற்றிற்கு நீதிமன்றத்தில் பதிந்து முந்தைய தீர்ப்பை மாற்றிக்கொள்ள முடியும். அதே போல, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இன்னும் உதவித்தொகை தேவை என்றாலும் மாற்றத்தை கோரமுடியும்.

தனக்கான உதவித் தொகை வேண்டாம் என்று மறுத்தாலும், குழந்தையின் கல்வி, வளார்ப்பு ஆகியவற்றிற்கு உதவித் தொகை வழங்கப்படுவதை பெரும்பாலும் நீதிபதிகளும் வரவேற்கிறார்கள். ஏனெனில் குழந்தையின் வளார்ப்பில் தந்தைக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதும் தார்மீக பொறுப்பும் உண்டு என்பதால். ஆனால் இது எந்த அளவிற்கு தரப்படுகிறது, தந்தாலும் மனைவி அல்லது கணாவனால் அபயோகிக்கப்படுகிறது, தந்தயர்கள் ஏன் குழந்தைகளுக்கான நிதி தருவதில் இத்தனை எதிர்ப்பை காட்டுகிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.


2 Responses  
  • இலவசக்கொத்தனார் writes:
    January 10th, 2008 at 1:27 pm

    இந்தப் பகுதியை படிக்காமல் விட்டுவிட்டேன். இன்றுதான் பார்த்தேன். முழுவதும் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

  • இலவசக்கொத்தனார் writes:
    January 10th, 2008 at 1:43 pm

    ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. இப்போ எல்லாம் வங்கியில் கணக்குத் துவங்கும் பொழுது வாடிக்கையாளரின் பெயரில் அலிமோனி அல்லது குழந்தைகள் காப்புத் தொகை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு இருக்கிறதா எனப் பார்த்து, அப்படி இருந்தால் அது பற்றி அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் என விதிமுறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions